.

Our Vision
அன்பு, கருணை என்பவற்றுடன் கூடிய உன்னத சேவையை மக்களுக்கு வழங்கி சிறந்த ஆரோக்கியமும் சுகாதார மேம்பாடும் பெற்ற சமுதாயம்

Our Mission
அா்ப்பணிப்புடனான சேவை, மனித நேயமுடனான பராமரிப்பு, திருப்திகரமான செயற்பாடுகள், பயன்தகு சுகாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், பாதுகாப்பான காப்புறுதி.

Our Motto
Primaordial Prevention Protected Generation

Wednesday, September 15, 2010

டெங்கு விழிப்புணா்வுக் கண்காட்சி

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் எதிர்வரும் 30.09.2010 தொடக்கம் 01.10.2010 வரை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மண்டபத்தில் டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டா் திருமதி. சகிலா இஸ்ஸதீன் அவா்களின் தலைமையில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளா் எம்.ரி.எ. நிசாம் அவா்கள் ஆரம்பித்து வைக்கிறார்கள். இதில் கௌரவ அதிதிகளாக பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளா் டாக்டா். எம்.எஸ். இப்றாலெப்பை அவா்களும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ. தௌபீக் அவா்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அனைவரும் வருகை தந்து டெங்கு தொடா்பான விழிப்புணா்வைப் பெற்று நலமோடு வாழ நம்மை வழிப்படுத்திக் கொள்வோம்.

1 comment: