.

Our Vision
அன்பு, கருணை என்பவற்றுடன் கூடிய உன்னத சேவையை மக்களுக்கு வழங்கி சிறந்த ஆரோக்கியமும் சுகாதார மேம்பாடும் பெற்ற சமுதாயம்

Our Mission
அா்ப்பணிப்புடனான சேவை, மனித நேயமுடனான பராமரிப்பு, திருப்திகரமான செயற்பாடுகள், பயன்தகு சுகாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், பாதுகாப்பான காப்புறுதி.

Our Motto
Primaordial Prevention Protected Generation

Wednesday, October 27, 2010

Malariya

Await for the details of Malariya.

Sunday, October 24, 2010

Prevention of Dengue Exhibition



























சென்ற மாதம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட
  • டெங்கு தொடா்பான புகைப்படக் கண்காட்சியும்
  • சுகவனம் பத்திரிகை வெளியீடும்
  • சுகாதார வைத்திய அலுவலக இணையதள ஆரம்பமும்
  • பபப
இடம்பெற்ற இந்நிகழ்வு தொடா்பான காட்சிகள் இங்கே...

Friday, September 24, 2010

பாதுகாப்பானது, சிக்கனமானது கொசுவலை மட்டுமே




கொசு விரட்டிகளால் கெடுதலா?

கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கவும் இரவு நன்கு தூங்கவும் கொசுவர்த்தி சுருள், மேட், கிரீம் முதலியவற்றை உபயோகப் படுத்துகிறோம் அல்லவா? இவற்றால் நம் ஆரோக்கியத்திற்கும், பணத்திற்கும் கேடு என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கொசுவர்த்திச் சுருள்களிலும் மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அலெத்ரின், டாலத்ரின் டி டிரான்ஸாலத்ரின் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் காலம், அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

மக்கள் கொசுக்களுக்குப் பயந்து மாலை ஆறு மணிக்கே ஜன்னல் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடை செய்து விடுகின்றனர். இவ்வாறு அடைபட்டக் காற்றுக்குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது, குடும்பத்தார் அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்களாலேயே பிராண வாயு மிகவும் குறைந்துவிடுகிறது. இதோடு புகையும், கேடு விளைவிக்கும் வாயுக்களும் வீட்டினுள் நிறைந்து விடுகின்றன. போதாக்குறைக்கு இருட்டியதுமே கொசு விரட்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதனால் வீட்டில் இருந்த சிறிதான பிராணவாயுவும் கெட்டு விடுகிறது. ஆக, இரவு முழுவதையும் மாசுக்காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிக்கிறார்கள். கொசு விரட்டிகளில் உடலில் சேர்ந்த விஷத்தை வெளியேற்ற சளிபிடித்தல், காய்ச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. சுத்திகரிப்பு நடக்காததால் மருந்து சாப்பிட்டும் குணம் பெற முடிவதில்லை.

மூன்று நாட்களில் இவை குறையாததால் அலர்ஜி என்று பெயர் சூட்டி, அந்தச் செயலை முடக்க ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மருந்துகளையும் ஆரோக்கியமாக உடல் தாக்குப் பிடிக்காமல் திணறுகிறது. அதே நேரத்தில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை வெளியேற்றும் செயல்முறை படிப்படியாக இழந்து விடுகிறது. இதன் மூலம் படை வீரர்களை இழந்த கோட்டையைப் போல நோய், எதிர்ப்பு சக்தியை இழந்த உடலைப் பெற்று விடுகிறது. பிறகு நோய்களின் வருகைக்குக் கேட்க வேண்டுமா?

தொடர்ந்து கொசு விரட்டி உபயோகித்து வருகிறவர்களுக்கு நுரையீரல் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவுக்குண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விடுவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மும்பையின் நுகர்வோர் வழிகாட்டும் கழகத்தின் முடிவுப்படி கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள்.

கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்க வல்லது. ‘அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல இழக்கச் செய்யவல்லது’.

‘மேட்’ புகையை பிஞ்சுக்குழந்தைகள் இரவு முழுவதும் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படலாம் என்கிறது லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம். இங்கே உள்ள டாக்டர் தேவிகாநாக் என்பவரின் கண்டுபிடிப்பு இது.

கொசுக்களைத் தடுக்க ஒரே எளிய வழி, பாதுகாப்பானது, சிக்கனமானது கொசுவலை மட்டுமே!



Tuesday, September 21, 2010

டெங்கு காய்ச்சலா? அறிவது எப்படி?

அன்றுதான் ஆரம்பித்த காய்ச்சல் 103- 104 எனக் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தது. பத்து வயது மதிக்கத்தக்க அந்தப் பையனின் கண்கள் சற்று சிவந்திருந்தன. கடுமையான உடல் உழைவினால் அமைதியாக இருக்க முடியாது அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான். சற்றுத் தொண்டை நோவும் இருந்தது. ஆயினும் தடிமன், மூக்கடைப்பு இருமல் போன்ற அறிகுறிகள் எதுவுமே இல்லை. இத்தகைய காய்ச்சல் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது.


'இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ' என கூட்டி வந்த தாய் கேட்டாள். எந்த வைத்தியனாலும் நூறு சதவிகிதம் நிச்சமாகச் சொல்ல முடியாது. காரணம் ஏனைய வைரஸ் காய்ச்சல்கள் போலவே இதுவும் ஆரம்பத்தில் இருக்கும். இது டெங்குதான் என உறுதியாகச் சொல்லக் கூடிய அறிகுறிகள் ஏதும் முதல் மூன்று நாட்களிலும் இருக்காது.

'இரத்தம் சோதித்துப் பார்ப்பமோ' என்று தாய் கேட்டாள். முதல் நாளிலிலேயே இரத்தம் சோதித்துப் பார்ப்பதிலும் எந்தவித பலனும் இருக்கப் போவதில்லை.

டெங்கு என்பதை நிச்சயமாகக் காட்டும்
Dengue antibody டெஸ்ட் செய்வதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். பெரும்பாலும் அதற்கிடையில் காய்ச்சல் குணமாகிவிடும்.

டெங்குவாக இருக்குமோ என ஐமிச்சம் என்றால், காய்ச்சல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் FBC என்று சொல்லப்படும்
Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்பார்கள். இந்தப் பரிசோதனைகளில் மாற்றம் இருந்தால் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து கணிக்க நேரிடும்.

ஆனால் அதுவரை ஏனைய கடும் காய்ச்சல்காரர்களைப் பராமரிப்பது போல பாராமரித்தால் போதுமானது. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் கொடுக்க வேண்டும். ஆறு மணிநேரத்திற்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். வளர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் இரண்டு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் அவர்களது எடைக்கு ஏற்ப அல்லது வயதிற்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுபடும்.

புரூபன், பொன்ஸ்டன், டைகுளோபெனிக் போன்ற வலிநிவாரணி மருந்துகளை டெங்கு என்ற சந்தேகம் இருந்தால் காய்சலுக்கோ உடல்வலிக்கோ கொடுக்கக் கூடாது. போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்தால் வழமைபோலச் சாப்பிடலாம். ஆயினும் கோக், நெக்ரோ போன்ற செந்நிறப் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல சிவப்பு நிறமுடைய ஏனைய உணவுகளையும், பீற்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.
ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல்
(Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன்போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.

அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை.

டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன.

பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும்.

டெங்கு காய்ச்சல் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளது. சிகப்பாக காட்டிய பகுதியில் கடுமையான பரிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது எயிடிஸ் எஜிப்பாய் (Aedes aegypti) என்ற வகை நுளம்பினால் பரவுகிறது. நோயாளியின் இரத்தம் குடித்து வயிறு பருத்திருக்கும் நுளம்பனைப் படத்தில் காணுங்கள்.






Saturday, September 18, 2010

டெங்கு நுளம்பு

டெங்கு நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்


டெங்கு நுளம்பார் பெருகின் வீடுகளில் உள்ளோர் அழிவர்.

உங்கள் வீட்டில் அல்லது அயலில் ஒருவருக்கு டெங்கு நோய் வந்திருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
அவரில் பசியாறுகிறார் ஒரு நுளம்பர்.
நோயாளி மருத்துவமனை சென்றுவிடுகிறார்.

மறுநாள் மீண்டும் பசியெடுத்த அதே நுளம்பர் உங்களுக்கு கடிக்கிறார்.

உங்களுக்கும் டெங்கு தொற்றுமா?

நிச்சயம் தொற்றாது!

தொற்றுவது எப்படி?

டெங்கு இரத்தத்தைக் குடித்திருந்தாலும் 7 நாட்கள் வரை டெங்கு கிருமியை அவரால் பரப்ப முடியாது.
காரணம் என்னவென்றால் நோயாளியிடம் குடித்த இரத்தத்தில் உள்ள அதே கிருமி நேரடியாக மற்றவர்களுக்குப் பரவுவதில்லை.
அதன் உடலில் பெருகி மீண்டும் மனிதர்களுக்கு தொற்றக் கூடிய நிலை ஏற்பட சுமார் 7 நாட்கள் செல்லும்.

ஆனால் அதற்கிடையில் உங்களையோ வேறு ஒருவரையோ கடிக்க முயலும் போது அடிப்பட்டுச் சாகும் சாத்தியம் நிறையவே உண்டு.

பதற்ற ஆசாமி

இந்த டெங்கு நுளம்பர் ஒரு பதற்ற ஆசாமி. அவர் ஒருவரிலிருந்து இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கையில், கடிபடுபவரின் உடலில் ஒரு சிறு அசைவு ஏற்பட்டாலும் தாங்க மாட்டார். பக்கெனப் பறந்து விடுவார். ஆனால் ஒரு சிறு வட்டம் அடித்துவிட்டு மீண்டும் பசியாற வருவார்.

நீங்கள் அவதானமாக இருந்து அடிக்க முற்பட்டால் தப்பிச் சிறகடிப்பார்.

ஆனால் பசியடங்கும் வரை சோம்பி இருக்கமாட்டார். வீட்டில் உள்ள மற்றொருவரையாவது பதம் பார்ப்பார்.

அதற்கிடையில் உங்கள் கை அவரது இரத்தத்தால் அசுத்தமானால் அதிஸ்டம் உங்கள் பக்கம்.

இவ்வாறு சுற்றிச் சுற்றிக் கடிக்கும் அந்த நுளம்பர் டெங்குவைப் பரப்பக் கூடிய நிலையில் இருந்தால் அதிஸ்டம் அவர்; பக்கம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆபத்துதான்.

ஆனால் ஒரு முறை வயிறு நிறையக் குடித்து விட்டால் ஆறுதல் எடுப்பார். தளபாடங்கள், திரைச்சீலை, விரித்திருக்கும் உடைகள், போட்டோ பிரேம் என எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஹாயாக மறைந்திருப்பார்.

தூசி தட்டுவது, நுளம்பு ரக்கறை விசிறுவது போன்ற சிறு அசைவுகளும் அவரை பதற்றமுற்றுப் பறக்க வைக்கும். பக்கென அடித்துக் கொன்றுவிடுங்கள். சிறிய நுளம்பர் என்றபடியால் தெளிவாகத் தெரியாது. கவனமாக அவதானிக்க வேண்டும்.

நுளம்புப் பண்ணை

ஓரிரு நுளம்பென்றால் இவ்வாறு தொலைத்துவிடலாம். ஆனால் உங்கள் வீட்டிலேயே நுளம்புப் பண்ணை எனில் இது சாத்தியப்படாது.

கொழும்பில் குப்பை கூளங்களை அகற்றாததால்தான் நுளம்பு பெருகுகிறது என்று சொன்னார்கள். இப்பொழுது ஓரளவு இது சீரடைந்துவிட்டாலும் நுளம்பிற்கு குறைவில்லை. அது மட்டுமின்றி டெங்கு காய்ச்சலுக்கும் குறைவில்லை.

காரணம் என்ன? டெங்குவைப் பரப்பும் நுளம்பான Aedes aegypti இன்னும் தாரளாமாக உலவுகிறது என்பதுதானே?

காரணம் இவர் வீதியை விட வீட்டிலும் அதிகம் பெருகுபவர். சிரட்டை, பிளாஸ்டிக் டப்பிகள் ஆகியவற்றில் தங்கக் கூடிய சிறிதளவு நன்னீரில் இது உற்பத்தியாகிறது என்பது யாவரும் அறிந்த ரகசியம்.


ஆயினும் இது அசுத்தமான நீரிலும், சற்று உப்பு கரிக்கும் நீரிலும் கூட பெருகக் கூடும் என இப்பொழுது தெரிகிறது. முட்டைகளிலிருந்து பொரித்து நுளம்புகளாக மாறுவதற்கு 7 முதல் 9 நாட்கள் செல்லும்.


மலேரியாவைப் பரப்பும் Aanophleles மற்றும் யானைக் காச்சலைப் பரப்பும் Culicines நுளம்புகளோடு ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய நுளம்பாகும். இயற்கையான பாதுகாப்பான சூழலில் 60 நாட்கள் வரை வாழக் கூடியதாகும்.

குடும்பக் கட்டுப்பாடு அறியாதவர்

இந்த நுளம்பர் ஒரு தடவையில் 30 முதல் 100 முட்டைகள் வரை இடுவார். இவர் நீரில் முட்டை இடுவதில்லை. நீர் நிலைக்கு சற்று மேலாக ஈரலிப்பான இடத்தில்தான் இடுவர்.


நீர் பட்டதும் அதில் முட்டை மிதந்து 2-3 நாட்களில் குடும்பியாக (Larva) ஆக மாறும். வளர்ந்து பறக்கும் நுளம்பாக மாற மேலும் 5-9 நாட்களாகும். அதற்கிடையில் நீரை மாற்றிவிட்டால் நுளம்பாக கோலம் கொள்ளும் முன்னரே அழிந்துவிடும்.

அழிப்பது எப்படி?

முட்டையானது வளர்வதற்கான நீர் கிடைக்காவிட்டால் பல மாதங்கள் வரை அழியாமல் சீவிக்கும் வல்லமை கொண்டது. எனவே நீர் இருக்கும் நிலைகளான பூச்சாடிகள், டிரம், வீட்டு நீர்த் தொட்டிகள், நீர்த்தாவர வளர்ப்பிடங்கள் போன்றவற்றின் நீரை அடிக்கடி புதிதாக மாற்றுவது மட்டுமின்றி, பக்கங்களை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வதன் மூலம் அவற்றின் முட்டைகளை நீங்கள் அழிக்கலாம்.

நீங்கள் எதிர்பார்காத இடங்களிலும் இவர் முட்டையிட்டுப் பெருகுவார்.

பிளாஸ்டிக் கப், வெற்றுப் போத்தல்கள், மரப் பொந்துகள், எறும்பு ஏறாதிருக்க மேசை அடியில் வைக்கும் சிறு பாத்திர நீர், வாழை போன்றவற்றின் இலைகளிலுள்ள பள்ளங்களில் கூட முட்டையிடலாம் என்பதால் நீங்கள் தப்புவது அரிது!

ஆனால் முடியாததல்ல.

கள்வர் ஏறாதிருக்க சுவர்களில் பதித்திருக்கும் கண்ணாடிகள், கூரை நீர் இறங்கப் பதித்திருக்கும் பீலி என எங்கெல்லாம் நீர் ஏழு நாட்களுக்கு மேல் தேங்கி நிற்குமோ அங்கெல்லாம் பெருகுவார்.

எப்ப கடிப்பார்?

இது பொதுவாக காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரான 2 மணிநேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக 2 மணிநேரத்திலும் இரத்தம் குடிக்கும் பழக்கம் உள்ள நுளம்பாகும்.

ஆயினும் பசியிருந்தால் ஏனைய நேரங்களில் இரத்தம் குடிக்கக் கூடாது என்ற சுயகட்டுப்பாடோ, கட்டளையோ எதுவும் நுளம்பிற்குக் கிடையாது.

பசித்தால் புசிக்கும் எந்நேரத்திலும்.

எனவே தொடர்ச்சியாக அவதானமாக இருக்க வேண்டியது எமது பொறுப்பாகும். டெங்கு நுளம்பானது மிருக இரத்தத்தையம் உறிஞ்சக் கூடும் ஆயினும் அதன் அபிமான உணவு மனித இரத்தம்தான்.

Wednesday, September 15, 2010

டெங்கு விழிப்புணா்வுக் கண்காட்சி

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் எதிர்வரும் 30.09.2010 தொடக்கம் 01.10.2010 வரை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மண்டபத்தில் டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டா் திருமதி. சகிலா இஸ்ஸதீன் அவா்களின் தலைமையில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளா் எம்.ரி.எ. நிசாம் அவா்கள் ஆரம்பித்து வைக்கிறார்கள். இதில் கௌரவ அதிதிகளாக பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளா் டாக்டா். எம்.எஸ். இப்றாலெப்பை அவா்களும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ. தௌபீக் அவா்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அனைவரும் வருகை தந்து டெங்கு தொடா்பான விழிப்புணா்வைப் பெற்று நலமோடு வாழ நம்மை வழிப்படுத்திக் கொள்வோம்.

Sunday, September 5, 2010

தாய்ப்பால் மற்றும் MOH Office bookmark

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது.


ஆனால் சில அம்மாக்களும், அம்மம்மாக்களும் 'தாய் சாப்பிடுகிறாள் இல்லை, களைச்சுப் போனாள். மாவைக் கரைச்சுக் கொடு' என்று தூண்டாமலும் இல்லை.

தன் அழகு கெட்டுவிடும் எனப் பால் கொடுப்பதில்லை எனச் சிலர் தாய்மாரை நக்கல் அடிப்பதும் உண்டு.

எவ்வாறாயினும் இவை யாவும் தவறான கருத்துக்களாகும். குழந்தைக்கு ஏற்றது தாய்ப் பால் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது.

தாயின் பிற்கால ஆரோக்கியத்திற்கும் பாலூட்டுதல் அவசியமானதே.

எல்லாத் தாய்மாரும் போலவே நீங்களும்!
உங்கள் குழந்தை பிறந்த உடனேயே அதற்கான உணவு உங்களிடம் தயாராக இருக்கிறது.

இயற்கை தந்த வரம் அது. தாய்ப்பால்.
அதைக் குழந்தைக்குக் கொடுக்கத் தவறாதீர்கள்.

நீடித்த உறவு

இருந்தபோதும் தாய்ப்பால் ஊட்டுவதன் முழு வெற்றியும் பலனும் உடனடியாக எல்லோருக்கும் இயல்பாகக் கிட்டிவிடுவதில்லை.

முதல் சின தினங்களில் நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே பெரிதும் தங்கியுள்ளது எனலாம்.

எல்லா முயற்சிகளும் போலவே பயிற்சிக்கப் பயிற்சிக்க பாலூட்டும் உங்கள் வினைத்திறனும் பெருகும்.



தொடுகையும் அணைத்தலும் அற்புதங்களை நிகழ்த்தும்.
சருமத்துடன் சருமம் படுவதினால் உறவு நெருக்கமடையும்.
குழந்தையுடன் நீங்கள் செலவளிக்கும் நேரம் முக்கியமானது.
குழந்தையுடன் உறவுறும் நேரம் அதிகரிக்க உறவின் நெருக்கமும் அதிகரிக்கும்.
பாலும் சொரியும்.
கடும்புப் பால்

முதற்பால் அல்லது கடும்புப் பால் பற்றி நீங்கள் அறிவீர்கள்.
நிறம் சற்று மஞ்சளாக இருப்பதுடன் சற்று தடிப்பாகவும் இருக்கிறது.
குறைந்த அளவிற்குள் நிறையப் போஷாக்குகள் செறிந்துள்ளன.

எனவே குறைந்த அளவையே குழந்தை குடித்தாலும் அதுவே குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.

தொற்று நோய்களைத் தடுக்கும்

நோய்களுக்கு எதிரான பிறபொருள் எதிரிகள் (Antibodies) இக் கடும்புப் பாலில் செறிந்திருந்து குழந்தை தொற்று நோய்களுக்கு ஆளாகாமல் பாதுகாக்கின்றது.

இவை உங்கள் வாழ்நாள் முழுவதுமாக நீங்கள் நோய்களுக்கு எதிராகப் போராடிப் பெற்ற நோய் எதிர்ப்புக் கவசமாகும்.
உங்களுக்குக் கிடைத்த கவசம் இப்பொழுது உங்கள் குழந்தையையும் பாதுகாக்கிறது.

உடனடியாக பாலூட்ட ஆரம்பிக்கும்போது இந்த நோயெதிருப்புப் பொருட்கள் முக்கியமாக உங்கள் குழந்தையின் உணவுக் கால்வாயில் படர்ந்து பரவி கிருமிகள் தொற்றாமல் பாதுகாக்கின்றன.

ஒவ்வாமையைத் தடுக்கும்
அத்துடன் ஒவ்வாமைகள் (Allergies) ஏற்படாமலும் தடுப்பதாக நம்பப்படுகிறது.
அது என்ன ஒவ்வாமை எனக் கேட்கிறீர்களா?

எமது பாரம்பரியத்தில் கிரந்தி என்று சொல்வோம்.
தோற் தடிப்பு, அரிப்பு, தலை அவிச்சல், சளி, மூக்கடைப்பு, தும்மல் போன்ற பலவும் இவற்றில் அடங்கும்.

உடனடியாகத் தாய்ப்பால் அதாவது கடும்புப் பால் கொடுக்காது புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்தால் மேற் கூறிய பாதுகாப்பு குழந்தைக்குக் கிட்டாமல் கிரந்திநோய்கள் (Atopic) தோன்றலாம்.

அத்துடன் வயிற்றோட்டம், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கும் ஆளாகலாம்.

எனவே பிறந்த உங்கள் குழந்தைக்கு தாய்பாலைத் தவிர வேறெதுவும் கொடுக்காதீர்கள்.

நீங்கள் நோயுற்றால்

பாலூட்டும்போது உங்களுக்கு தடிமன், சளி போன்ற தொற்று நோய்கள் வந்தால் நீங்கள் தொடர்ந்து பாலூட்டலாமா?
நிச்சயம் ஊட்ட வேண்டும்.

தொற்று நோய்கள் உங்களுக்கு வரும்போது உங்கள் உடல் அதை எதிர்த்துப் போராடுவதால் அதற்கு எதிரான பிறபொருள் எதிரிகள் உங்கள் உடலில் தோன்றும்.
இவை உங்களது நோயைத் தணிப்பது மட்டுமின்றி குழந்தைக்கும் அதனை தாய்பால் ஊடாக கடத்துகின்றன.
அவர்களும் நோயெதிர்ப்பைப் பெறுவார்கள்.

பிறந்த உடன்

குழந்தைக்கும் உங்களுக்கும் இரத்த உறவு என்றும் இருக்கவே இருக்கிறது.
ஆனால் பிறந்த உடன் குழந்தையுடனான சரும உறவும் நெருக்கமும் அதன் நீட்சிக்கு மிகவும் முக்கியமாகும்.

பிறந்த உடன் உங்கள் குழந்தையை உங்கள் சருமத்தில் பட வைப்பதால் குழந்தைக்கு உங்கள் சரும வெப்பம் கிட்டும்.
அமைதிப்படுத்தும், அதன் சுவாசத்தையும் ஒழுங்காக்கும்.

பெரும்பாலான குழந்தைகள் பிறந்த உடனேயே விழிப்புணர்வுடன் இருக்கும். தாய்ப்பாலை நாடவும் கூடும்.
மருத்துவத் தாதியின் உதவியுடன் பாலூட்டலாம்.

குழந்தை தாய்ப்பால் அருந்தியதும் உங்கள் உடலானது குழந்தையின் தேவைக்கு ஏற்ப சுரக்கத் தயாராகும்.
எனவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகப் பாலூட்டலை ஆரம்பியுங்கள்.

ஊட்டுவது அல்ல தானே குடிப்பது

இரண்டு மூன்று நாட்கள் கழிய உங்கள் மார்புகள் கூடுதலாக பருத்து வெப்பமடைவதை உணர்வீர்கள். கடும்புப் பால் கழிந்து பால் அதிகமாகச் சுரக்கத் தொடங்குவதை இது குறிக்கும்.

எனவே குழந்தை வேண்டுமளவிற்கு அதிகம் பாலூட்ட முயலுங்கள். குழந்தையின் தேவைக்கு ஏற்பவே உங்களுக்குப் பால் சுரக்கும்.
குழந்தை தனக்குத் தேவையான அளவு தானே உறிஞ்சட்டும்.

அதிகம் ஊட்ட வேண்டும் என நீங்கள் தெண்டிப்பது அவசியமற்றது.
முதல் ஓரிரு நாட்களுக்கு நீங்கள் குழந்தைக்கு ஊட்டுவதாக இருக்கும்.
அதன் பின்னர் குழந்தைக்கு பழக்கமாகிவிடும்.
அது தானே தனது தேவைக்கு ஏற்பக் குடிக்க ஆரம்பிக்கும்.

பாலின் தரம்

உங்கள் பாலின் தடிப்பு ஆரம்பத்தில் கடும்புப் பாலாக இருந்தது போலன்றி பின் சில நாட்களில் நீர்த்தன்மையாக மாறும்.

உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பாலின் அடர்த்தியும் உள்ளடக்கமும் மாறும். முதல் ஓரிரு நாட்கள் போலன்றி அதன் நீர்த்தேவை அதிகரிப்பதால் அவ்வாறு இருந்தாலும் அதற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் யாவும் அதில் அடங்கியிருக்கும்.

எந்த விலையுர்ந்த மாப்பாலிலும் இல்லாத அளவு போஷனைப் பொருட்களும், நோய்த் தடுப்புக் கூறுகளும் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கிறது.

குழந்தை பசித்து அழும்போது உங்கள் மார்பைக் கொடுங்கள்.
தனது தேவைக்கு ஏற்ற அளவில் அருந்த அது பழகிக் கொள்ளும்.
மாறாக உங்கள் மற்ற வேலைகள் காரணமாக அதற்கு ஏற்ப பாலூட்டும் நேரங்களைத் தீர்மானிப்பது நல்ல முறையல்ல.


தாய்ப்பால் ஊட்டுவது ஒரு அற்புதமான அனுபவம்.
உங்களுக்கும் குழந்தைக்கும் அது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும்.

முழுக் குடும்பத்தையும் ஆனந்தமடைய வைக்கும்.

இன்று மட்டுமல்ல!

குழந்தை வளர்ந்த பின்னும் அதற்கு தாய்பால் உண்டதால் நல் ஆரோக்கியம் தொடர்ந்து கிட்டும்.
ஊட்டியவருக்கும்தான்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் தாய்பால் கொடுத்தல் தொடா்பான விழிப்பூட்டல் புக்மார்க் வெளியிடப்பட்டுள்ளது.


Saturday, August 28, 2010

Dengue Inspection Handbill



MOH Anthem

This anthem is sung by MOH Staff before start their daily work.

Feeding Promotion Centre


The centre was recently opened by MOH Sainthamaruthu

Thursday, June 24, 2010